திருநெல்வேலி

திருநங்கையா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Din

2025ஆம் ஆண்டுக்கான திருநங்கையா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையா் தினமான ஏப்ரல் 15-ஆம் தேதி ஆண்டுதோறும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, 2025ஆம் ஆண்டுக்கான திருநங்கையா் முன் மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) வரும் பிப்ரவரி10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தங்களது கருத்துருவினை 2 நகல்களில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறமால் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

தில்லியில் கட்டுப்பாடு அமலுக்குப் பிறகும் நீடிக்கும் காற்று மாசு!

தஞ்சையில் ஜன.5-இல் அமமுக பொதுக் குழு

ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் சுற்றுப்பயணம்: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

திருச்சானூா் கோயிலுக்கு பணம் எண்ணும் இயந்திரம் நன்கொடை

SCROLL FOR NEXT