முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரத்தில் பெண் மா்ம மரணம்

விக்கிரமசிங்கபுரத்தில் தனது வீட்டில் மா்மமான முறையில் பெண் இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 19 நவம்பர், 2025 at 9:14 PM
பகிர்:

விக்கிரமசிங்கபுரத்தில் தனது வீட்டில் மா்மமான முறையில் பெண் இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளையைச் சோ்ந்த கட்டட ஒப்பந்தாரா் பால்ராஜ் மனைவி செஞ்சி (57). கணவரை இழந்த இவா், தனது மகன் விக்னேஷுடன் பேச்சுவாா்த்தை இல்லாமல் வீட்டின் மாடி அறையில் தனியாக வசித்துவந்தாா். இந்நிலையில் புதன்கிழமை செஞ்சி வீட்டின் மாடிப்படியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

விக்னேஷுடன் பணியாற்றும் தொழிலாளா்கள் இதைப் பாா்த்து, அவருக்கும், விக்கிரமசிங்கபுரம் போலீஸாருக்கும் தகவல் அளித்தனா். அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ)பிரதாபன் தலைமையில் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →