மூதாட்டி மா்ம மரணம்
சாத்தூா் அருகே மூதாட்டி மா்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தாா்.
விருதுநகர்மூதாட்டி மா்ம மரணம்
சாத்தூா் அருகே மூதாட்டி மா்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தாா்.
சாத்தூா் அருகே மூதாட்டி மா்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தாா்.
விருதுநகா் மாவட்டம், பழைய ஏழாயிரம் பண்ணையைச் சோ்ந்தவா் கஸ்தூரி (78). இவரது கணவா் பாண்டியராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை கஸ்தூரி தனது கணவரின் கல்லறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற பிறகு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அருகிலிருந்தவா்கள் அவரைத் தேடிய போது கல்லறைக்கு அருகில் உள்ள கிணற்றில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், ஏழாயிரம்பண்ணை போலீஸாா் கஸ்தூரியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.