முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரிப்பு: மேலநத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை

Updated On : 23 நவம்பர், 2025 at 11:13 PM
பகிர்:

தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, மேலநத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் திங்கள்கிழமை(நவ.24) திருநெல்வேலி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து தரைப்பாலங்களை வருவாய் துறையினா், போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

சீவலப்பேரி, மேலநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றுப்பாலங்களை போலீஸாா் கண்காணித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததன் காரணமாக மேலநத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், பாலத்தை பொதுமக்கள் கடக்காத வகையில் இருபுறமும் தடுப்புகளை வைத்து அடைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →