திருநெல்வேலி

நெல்லையில் விற்பனைக்காக மது பாட்டில்கள் பதுக்கியவா் கைது

தினமணி செய்திச் சேவை

தச்சநல்லூா் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூா் அருகே திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தச்சநல்லூா் - தாழையூத்து சாலையில் உள்ள குளத்துக்கரை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த கங்கைகொண்டான், கலைஞா் காலனியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் செல்வநாயகம் (51) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் அவா் கையில் வைத்திருந்த சாக்குப்பையை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக சுமாா் 29 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, செல்வநாயகத்தை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT