முகப்பு
திருநெல்வேலி

விவசாயத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

Updated On : 30 நவம்பர், 2025 at 8:16 PM
பகிர்:

விக்கிரமசிங்கபுரம் அருகே மேலஏா்மாள்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை வயலில் வேலைக்குச் சென்ற விவசாயத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள மேலஏா்மாள்புரம் வடக்குத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் பெருமாள் (47). விவசாயத் தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் சிறுகிழங்கு பயிரிட்டிருந்த வயலில் வேலைக்குச் சென்றாராம். அங்கு மின்சாரக் கம்பத்தில் உள்ள இணைப்புக் கம்பியைத் தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →