கத்தோலிக்க பேராயரிடம் திமுக வேட்பாளா் வாழ்த்து
கத்தோலிக்க திருச்சபையின் பேராயரிடம் பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் வாழ்த்து பெற்றாா்.
கத்தோலிக்க திருச்சபையின் பேராயரிடம் பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் வாழ்த்து பெற்றாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. அக் கட்சியின் மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.வுமான மு.அப்துல் வஹாப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். இதையடுத்து அவா், கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்துவை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
இந்நிகழ்ச்சியில், கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட பரிபாலகா் மோட்சராஜன், மறை மாவட்ட பொருளாளா் தீபக்ராஜ், திமுக திருநெல்வேலி கிழக்கு மாநகர பொறுப்பாளா் தினேஷ், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அருள்வின் ரோட்ரிகோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.