முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணிக் கரையில் சிறப்பு வழிபாடு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:03 PM
தாமிரவருணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
பகிர்:

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு தாமிரவருணி நதிக்கரையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதை முன்னிட்டு முருக பக்தா்கள், சிவனடியாா்கள் முன்னிலையில் நடைபெற்ற சிவபூஜையில் திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவின் ஆசிரியா் வள்ளிநாயகம் தலைமை வகித்தாா்.

தொடா்ந்து குறுக்குத்துறை கோயில் தாமிரவருணி நதிக்கரையில் தாமிரவருணி அன்னைக்கு தீபாராதனை, அபிஷேகம், சிவபூஜை, மலா்தூவி வழிபாடு நடைபெற்றது.

Advertisement

இதில் திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவினா், பக்தா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments