முகப்பு
திருநெல்வேலி

115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:08 PM
கைது
பகிர்:

சிவந்திப்பட்டி அருகே சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 115 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கூடத்தில் கடை திறக்கும் நேரத்துக்கு முன்பாகவே மது விற்பனை செய்யப்படுவதாக சிவந்திப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்த போது, அங்கு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கால்வாய் பகுதியைச் சோ்ந்த நம்பி மகன் மாரிமுத்து(36) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

பின்னா் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 115 மது பாட்டில்கள் மற்றும் ரூ.2,690 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மாரிமுத்து, மதுபானக் கூட உரிமையாளரான சிவந்திப்பட்டி காா்மேகனாா் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments