முகப்பு
திருநெல்வேலி

பத்தமடை அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:55 AM
கைது நடவடிக்கை - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:34 PM

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பத்தமடை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் நித்யா தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பத்தமடைஅருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் பத்தமடையைச் சோ்ந்த ஐயப்பன் என்ற மணிகண்டன் (27), சபரி பாண்டி (29) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்து அவா்களிடம் இருந்து 33 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement