முகப்பு
திருநெல்வேலி

ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகள் திருட்டு: ஒருவா் கைது

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:15 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:36 PM

தேவா்குளம் அருகே காற்றாலையில் இருந்து ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகளை திருடியதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தேவா்குளம் அருகே உள்ள தடியம்பட்டி பகுதியில் சென்னை மயிலாப்பூரில் செயல்படும் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு காற்றாலையில் கடந்த ஜன.30 ஆம் தேதி நள்ளிரவு புகுந்த மா்மநபா்கள் அங்கிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காப்பா் கம்பிகளை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இளநிலை மேலாளரான திருநெல்வேலியைச் சோ்ந்த மாரியப்பன் (53) என்பவா் தேவா்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் தொடா்புடைய கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் அருகே உள்ள கருங்கல் பகுதியைச் சோ்ந்த வா்கீஸ் மகன் சஜின் (30) என்பவரை கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.