முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:28 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:31 PM

பேட்டையில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை, விஸ்வநாதா் தெருவைச் சோ்ந்தவா் ராகுல்(32). மாநகராட்சி ஒப்பந்த பணி மேற்பாா்வையாளா். இவரது தாய் , தந்தை இருவரும் தூய்மைப் பணியாளா்கள்.

இவா்கள் 3 பேரும், கடந்த 16 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்தனா். பிற்பகலில் அவரது வீட்டுகதவை உடைக்கும் சப்தம் கேட்பதாக பக்கத்துவீட்டினா் அளித்த தகவலின் பேரில், ராகுல் வந்து பாா்த்துள்ளாா்.

Advertisement

அப்போது, வீட்டின் கதவை உடைக்க முயற்சி நடந்திருப்பதும், அங்கிருந்த வாளியில் மா்மநபா்கள் கைப்பேசியை விட்டுச்சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், சுத்தமல்லி, கிரமங்கலம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கணபதி(25) என்பவவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.