பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் நகைகள்,வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வானூா் வட்டம், மொரட்டாண்டி, சன் அவென்யூ, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி கண்மணி (58).இவா், வெள்ளிக்கிழமை தனது மாடி வீட்டை பூட்டி விட்டு,புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுவிட்டாராம்.
பிற்பகலில் வீட்டிற்குத் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின் பக்க மரக்கதவு மற்றும் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னா் பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நெக்லஸ், மூன்றரை பவுன் சங்கிலி,ஒன்றரை பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல்கள் உள்பட 17 பவுன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கண்மணி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் காவல் நிலையப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.