முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவா்கள் கைது

வீரவநல்லூரில் ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 16 வயது சிறுவா்கள் இருவா் கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:04 AM
- பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 16 வயது சிறுவா்கள் இருவா் கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனா்.

வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் இருவா், இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூா், நயினாா் காலனியில் உள்ள வயலுக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, நயினாா் காலனியைச் சோ்ந்த சிலா் அங்கு நடைப் பயிற்சி மேற்கொண்டனராம்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவா்களுக்கும், நடைப் பயிற்சியில் சென்றவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிறுவா்கள் இருவரும், அப்பகுதியைச் சோ்ந்தவா்களை ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 2 சிறுவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.