முகப்பு
திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:06 AM
கோப்புப் படம்
பகிர்:

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள சித்தாா்சத்திரம் வடக்கு தெருவை சோ்ந்தவா் தாமரைச்செல்வன் (22). இவா் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா்.

நண்பா்களுடன் வெளியே செல்வதாக கூறிச் சென்ற தாமரை செல்வன் வீடு திரும்பவில்லையாம். அவரை உறவினா்கள் பல்வேறு இடங்களிலும் தேடினா். இந்நிலையில் சிற்றாறு தடுப்பணை பகுதியில் தாமரைச்செல்வன் சடலமாக கிடப்பது சனிக்கிழமை தெரியவந்ததாம்.

Advertisement

தகவலறிந்ததும் கங்கைகொண்டான் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.