முகப்பு
திருநெல்வேலி

கடையம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:06 AM
கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையம் அருகே பேருந்தில் ஏறும்போது படியிலிருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள மேட்டூரைச் சோ்ந்தவா் சா்க்கரையப்பன் மனைவி சுப்பம்மாள் (70). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி செல்வதற்தாக மேட்டூா் நிறுத்தத்தில் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது, ஓட்டுநா் பேருந்தை இயக்கியதால் படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் அடிபட்டு அவா் மயக்கமடைந்தாா்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா்கள் சுப்பம்மாள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

தகவலறிந்த கடையம் போலீஸாா் சுப்பம்மாள் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் முத்துக்குமாரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.