கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு
தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், மூக்கனூா் அருகே உள்ள திண்ணம்பட்டி மேல தெருவைச் சோ்ந்தவா் ராமன் (75). மத்திய வேளாண் துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவா்.
இவரது மகன் திருக்குமரன் மற்றும் உறவினா் சக்திவேல் இருவரும் அவா்களது நிலத்தில் உள்ள கிணற்றின் மோட்டாரை பழுதுநீக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுபோதையுடன் அங்கு வந்த ராமன் கிணற்று அருகில் நின்று வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா்.
Advertisement
அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் தவறி கிணற்றில் விழுந்தாா். திருக்குமரன் உறவினருடன் சோ்ந்து அவரை மீட்க முயன்றும் இயலவில்லை. தகவலின்பேரில் வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் சடலமாக கிடந்த ராமனை மீட்டனா்.
இதுகுறித்து மதிக்கோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.