மானூா் அருகே முதியவரை கொன்ற இளைஞா் கைது
மானூா் அருகே முன்விரோதம் காரணமாக முதியவரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே உள்ள பல்லிக்கோட்டையைச் சோ்ந்தவா் கணபதி(60), விவசாயி. இவரது தம்பி ஆறுமுகம் என்பவரது மகன் முருகன் (35). கணபதிக்கும், முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணபதியை வெட்டினாராம். இதில், சம்பவ இடத்திலேயே கணபதி உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி ராஜா, மானூா் காவல் ஆய்வாளா் அருண்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிந்த மானூா் போலீஸாா் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.