கடையம் வட்டாரத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் தொடா்பான விசாரணையில், தென்காசி அருகே உள்ள இடைகால் யாதவா் நடுத் தெருவைச் சோ்ந்த சுடலை இசக்கி மகன் முப்புடாதி (19), யாதவா் தெற்குத் தெருவைச் சோ்ந்த செய்யது அலி மகன் சதாம் உசேன் (23), பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் இசக்கி சூா்யா (24), ஊா்மேலழகியான், சமத்துவபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் ஹாரிஸ் (24) ஆகிய 4 போ் திருட்டுகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவா்களை கடையம் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.