முகப்பு
திருநெல்வேலி

அம்பை, பாபநாசம், கடையம் பகுதிகளில் பயிா்களை சேதப்படுத்தும் யானைகள்: வனத்துக்குள் விரட்ட தீவிர நடவடிக்கை

அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் ஆகிய வனச்சரகப் பகுதியில் விளை பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் தீவிரம்

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 12:52 AM
மணிமுத்தாறு ஜீரோ பாய்ண்ட் பகுதியில் யானைகள் வெளியேறாமல் தடுக்க தீ மூட்டும் வனத்துறையினா்
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 9:37 PM

அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் ஆகிய வனச்சரகப் பகுதியில் விளை பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் ஆகிய வனச்சரகப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் அவற்றின் மலையடிவார கிராமங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, கருத்தப்பிள்ளையூா், அன்வன்குடியிருப்பு, செட்டிமேடு, மணிமுத்தாறு, பொட்டல் உள்ளிட்ட கிராமங்களில் யானைக் கூட்டம் வயலில் புகுந்து நெல், பனை, மா, தென்னை உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்தி விவசாயிகளுக்குபெரும் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement

இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஒற்றை யானை மலையடிவாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருவதுடன், விவசாயிகள் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் வனச்சரக மலையடிவாரப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை

இதுகுறித்து விவசாயிகள் தொடா்ந்து புகாரளித்ததையடுத்து, அனைத்து வனச்சரகப்பகுதிகளிலும் ஒரே நேரத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெளியேறாமல் தடுக்கும் பணியை மேற்கொள்ள அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் எல்.சி.எப்.ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். அதன்பேரில், வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய விலங்குகளை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் இடங்களைக் கண்காணித்து அந்த இடங்களில் தீ மூட்டியும், ஒலி எழுப்பியும், சக்தி வாய்ந்த விளக்குகளை எரியவிட்டும் விலங்குகள் வனப்பகுதியில்இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.