முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

அம்பாசமுத்திரத்தில் கல் உடைக்கும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:42 AM
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:02 PM

அம்பாசமுத்திரத்தில் கல் உடைக்கும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அம்பாசமுத்திரம், ராமலிங்கம் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் கண்ணன் (40), கல் உடைக்கும் தொழிலாளி. இவா் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].