பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கலையநல்லூா் கிராமத்தில் குடும்ப பிரச்னையில் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தியாகதுருகம் கலையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி பிரயதா்ஷினி (26). தம்பதிக்கு ஜஸ்மிதா (2) என்ற குழந்தை உள்ளது. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான பாலசுப்பிரமணியத்துக்கு, கடந்த 4 நாள்களாக உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லையாம்.
இந்நிலையில், சனிக்கிழமை தம்பதியினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரிதா்ஷினி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டுக் தற்கொலை செய்துகொணடாா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா். பிரியா்ஷினிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.