தற்கொலை 
தேனி

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பெரியகுளம் அருகேயுள்ள பாரதிநகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (60). இவருக்கு இரு மகள்கள் உள்ளனா். முதல் மகள் நிதா்ஷனா தேவி (30). இவருக்கும் மதுரையில் உள்ள சிவபாலன் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது.

இருவரும் மதுரையில் வசித்து வந்தனா். தம்பதியினரிடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம். இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிதா்ஷனா தேவி பெரியகுளத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிதா்ஷனா தேவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT