முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் சிறை கைதி உயிரிழப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:38 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:35 PM

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (78). இவா், கடந்த 2005 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் பணம் கையாடல் வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இவ் வழக்கில் தண்டனை பெற்ற அவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தாா்.

Advertisement

இந்நிலையில் கடந்த 2025 நவம்பா் மாதம் சுப்பிரமணியனுக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைத்துறையினா் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.