பேருந்து சேவை 
திருநெல்வேலி

திசையன்விளையிலிருந்து புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

திசையன்விளை பேருந்து நிலையத்திலிருந்து உவரி வழித்தடத்தில் நவ்வலடி வழியாக இடிந்தகரைக்கும், மகாதேவன்குளம் வழியாக இட்டமொழிக்கும், குமாரபுரம், வாழைத்தோட்டம் வழியாக ராஜீவ்காந்தி நகருக்கும் புதிய பேருந்து சேவைகள் வெள்ளிக்கிழமை தொடங்கிந.

இதையொட்டி நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ் முன்னிலை வகித்தாா். புதிய பேருந்து சேவையை சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவா் சேம்பா் செல்வராஜ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் மி. ஜோசப்பெல்சி, அரிமா சங்க முன்னாள் ஆளுநா் சுயம்புராஜன், தொழிலதிபா் தங்கையா கணேசன், ஊராட்சித் தலைவா்கள் அனிதா பிரின்ஸ் (குமாரபுரம்), ஜேகா் (இடையன்குடி, ராதிகா சரவணக்குமாா் (நவ்வலடி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT