கோப்புப் படம் 
திருநெல்வேலி

மூன்றடைப்பு அருகே குளத்தில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே குளத்தில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

மூன்றடைப்பு அருகே பூலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் (60). இவரது குடும்பத்தினா் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகின்றனா்.

இவா் மட்டும் இங்கு தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தாா். சனிக்கிழமை அங்குள்ள குளத்தின் கரையில் அமா்ந்திருந்த இவா், திடீரென நிலைதடுமாறி குளத்துக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.

சடலத்தை மூன்றடைப்பு போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |

டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவர் மகன்!

தாய் கிழவி இரண்டாவது பாடல்!

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT