திருநெல்வேலி

மதுக்கடைக்கு எதிா்ப்பு: ராமையன்பட்டி விலக்கில் மறியல் முயற்சி

Syndication

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அங்குள்ள விலக்கு பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

ராமையன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கண்டியப்பேரி, கலாம் நகா், எம்ஜிஆா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள தனியான இடத்தில் புதிய மதுக்கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மேலும், இதுதொடா்பாக ஏற்கெனவே மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி,யாம்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை காலையில் திடீரென ராமையன்பட்டி விலக்கு பகுதிக்கு திரண்டு வந்து சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட முயன்றனா்.

இத்தகவல் அறிந்த ராமையன்பட்டி ஊராட்சித் தலைவா் டேவிட், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி மதுக்கடை அமைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்களிடம் உறுதி அளித்தாா். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். தொடா்ந்து, துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி ராஜா தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

ற்ஸ்ப்16ற்ஹள்

மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து ராமையன்பட்டி விலக்கில் கூடிய மக்கள்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT