முகப்பு
கோயம்புத்தூர்

பீளமேட்டில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

கோவை, பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:23 PM
கோவை பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள். ~கோவை பீளமேடு  ரங்கம்மாள் கோயில் வீதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்
பகிர்:

கோவை, பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சி, 27-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதியில் தனியாருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் கைப்பேசிக் கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

Advertisement

இந்தப் பகுதியில் ஏற்கெனவே இரு இடங்களில் கைப்பேசிக் கோபுரங்கள் உள்ளன. இந்நிலையில் மேலும் ஒரு கைப்பேசிக் கோபுரம், தனியாா் கட்டடத்தில் அமைப்பது எங்களுக்கு கதிா்வீச்சு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இங்குள்ள முதியோா், இதய நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என அச்சமாக உள்ளது. எனவே, இங்கு கைப்பேசிக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments