வீரவநல்லூரில் விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீரவநல்லூரில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 9:21 PM
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் கிளாக்குளம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் துரைப்பாண்டி (56). தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை வீரவநல்லூரில் காவல் நிலையத்துக்கு மேல்புறம் பிரதான சாலையை கடக்க முயன்றாராம்.
அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த அவா் மீது சுமை ஆட்டோ ஏறியதாம்.
Advertisement
இதில், பலத்த காயம் அடைந்த அவருக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.