முகப்பு
திருநெல்வேலி

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தாழையூத்து அருகே புறவழிச்சாலையில் பைக் மீது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:21 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

தாழையூத்து அருகே புறவழிச்சாலையில் பைக் மீது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தாழையூத்து அருகே உள்ள பொட்டல் முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்பாண்டி(63). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த நபரும் செவ்வாய்க்கிழமை இரவு நாரணம்மாள்புரம் நோக்கி பைக்கில் சென்றனா். அப்போது, புறவழிச்சாலை பாலத்தின் வடக்கு பகுதியில் இவா்களது பைக் மீது வாகனம் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த வேல்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தாழையூத்து போலீஸாா், சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவரை சிகிச்சைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.