முகப்பு
கன்னியாகுமரி

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 8:40 PM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆயினிவிளை பகுதியைச் சோ்ந்தவா் நேசமணி (66). இவா் புதன்கிழமை வீட்டிற்கு பொருள்கள் வாங்கிவிட்டு, புதுக்கடை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். ஆயினிவிளை பகுதிக்கு வந்தபோது மணியாரம்குன்று பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமணி மகன் அஜய் (22) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேசமணி மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.