கைது 
திருநெல்வேலி

3.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருநெல்வேலி மாநகரில் 3.9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அதில் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.

Syndication

திருநெல்வேலி மாநகரில் 3.9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அதில் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியாா் நகா் அருகே காவல் உதவி ஆய்வாளா் அல்லிஅரசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் மகன் வேல்முருகன்(25), என்பவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், விற்பனைக்காக சுமாா் 3.9 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வேல்முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அவரிடமிருந்த கஞ்சா, பைக், கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

‘சமூக ஊடகங்களில் சிறாரைத் தடுப்பது சவாலானது’

சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு!

விஜயகாந்தை நேசிப்பவா்கள் திமுக கூட்டணியை ஏற்க மாட்டாா்கள்: தவெக இணைப் பொதுச் செயலா் பேட்டி

ககன்யான் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் நவீன பாராசூட் சோதனை வெற்றி: டிஆா்டிஓ சாதனை!

பொதுத் தோ்வுக்கு ‘ஸ்கிரைப்’ நியமனம்: மீண்டும் பழைய முறையே தொடரும்!

SCROLL FOR NEXT