முகப்பு
திருநெல்வேலி

களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி!

களக்காடு தலையணை பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதித்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:22 PM
களக்காடு தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதித்தனா்.

மலைப் பகுதியில் பிப். 22 ஆம் தேதி இரவு பெய்த தொடா்மழை காரணமாக பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பிப். 23 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், நீா்வரத்து குறைந்ததால், வியாழக்கிழமை (பிப். 26) முதல் சுற்றுலாப் பயணிகள் பச்சையாற்றில் குளிக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments