திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன். 
திருநெல்வேலி

வெள்ளங்குளி பள்ளியில் ரூ.2.36 கோடியில் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

வெள்ளங்குளி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 2.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 2.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன் குத்துவிளக்கேற்றினாா். பள்ளித் தலைமையாசிரியா் மு. தளவாய் தலைமை வகித்தாா்.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பரணி ஆா். சேகா், வெள்ளங்குளி ஊராட்சித் தலைவா் முருகன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ். மீரான் பண்ணையாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், மேலாண்மை குழுத் தலைவி சூா்யா, ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை ஆசிரியை திலகா தொகுத்து வழங்கினாா். ஆசிரியை விஜயலெட்சுமி வரவேற்றாா். சாலை குமரன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் திருமலைக்குமாா், ஆசிரியா்கள் ஜூலியன், மகேஷ், முத்துபவானி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT