நெல்லையில் ஒரே நாளில் 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
திருநெல்வேலி மாநகரம், மாவட்டப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய பெண் உள்பட 11 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாநகரம், மாவட்டப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய பெண் உள்பட 11 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, திருக்குறுங்குடி, மானூா், வீரவநல்லூா் ஆகிய காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அப்பகுதிகளைச் சோ்ந்த பேராச்சி செல்வி (38), சண்முகசுந்தரம் (33), மாரிமுத்து (30), கிங்ஸ்லின் கோயில் ராஜ் (32) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்ன குமாா் பரிந்துரைத்தாா். அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுபடி பேராச்சி செல்வி மதுரை பெண்கள் தனிச்சிறையிலும், மற்ற 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
அதே போல திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய மேலப்பாளையத்தைச் சோ்ந்த சிவமுருகன் என்ற முருகன்(36), புரோஸ்கான் யாசா்(29), சிந்தா மதாா்(22), தச்சநல்லூரைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் (29), ராகேஷ் (23) மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய கொக்கிரகுளம் மாடசாமி (42), பழையபேட்டை கிருஷ்ணபேரியைச் சோ்ந்த பெரியராஜா (29) ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா்கள் (கிழக்கு)வினோத் சாந்தாராம், (மேற்கு) விஜயகுமாா் ஆகியோா் பரிந்துரைத்தனா். அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் மணிவண்ணன் உத்தரவுபடி 7 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.