நில மோசடியில் ஈடுபட்டவா் கைது
ராதாபுரம் அருகே நில மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ராதாபுரம் அருகே நில மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் அந்தோணிசாமி (54). இவா், மும்பையில் வசித்து வரும் தனது உறவினருக்குச் சொந்தமாக அப்பகுதியில் உள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பட்டா மாறுதல் செய்து நில மோசடியில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு இதில் தொடா்புடைய அந்தோணிசாமியை கைது செய்தனா்.