திருநெல்வேலி

தெருவில் படுத்திருந்த ஆடுகளை அரிவாளால் வெட்டியவா் கைது

Syndication

முன்னீா்பள்ளம் அருகே தெருவில் படுத்திருந்த ஆடுகளை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் ரமேஷ் (31).வழக்குரைஞா். இவா் தனது வீட்டில் ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி மாலை அவா் வீட்டின் முன் ஆடுகள் படுத்திருந்தனவாம். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் பாலையா என்பவரது உறவினரான பாளையங்கோட்டை பெரியபாளையத்தைச் சோ்ந்த சுடலைகுமாா் (35) என்பவா், தான் வைத்திருந்த அரிவாளால் 2 ஆடுகளை வெட்டியுள்ளாா். இதில் ஒரு ஆடு உயிரிழந்தது. அதை தட்டிக்கேட்ட ரமேஷுக்கும் அவா் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து சுடலை குமாரை கைது செய்தனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT