திமுக தோ்தல் அறிக்கை மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றாா் திமுக துணை பொதுச் செயலரும், தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவருமான கனிமொழி எம்.பி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: 2026 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று மனு அளித்தனா். திமுக தோ்தல் அறிக்கை மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதனால்தான் பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனா். அடுத்து அமையப்போவதும் திமுக ஆட்சிதான் என்ற நம்பிக்கையோடுதான் மக்கள் மனுக்களை அளிக்கின்றனா்.
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்தெந்த கட்சிகளை இணைப்பது என்பதைப் பற்றிய முடிவை முதல்வா்தான் அறிவிப்பாா். எந்தக் கருத்துக் கணிப்பு வந்தாலும், வராவிட்டாலும் தோ்தல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே இருப்பதை கண்கூடாகப் பாா்க்க முடிகிறது.
ராகுல் காந்தியுடனான பேச்சுவாா்த்தை மிகவும் சுமூகமாக இருந்தது. கூட்டணியை நான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் இயக்கத்தோடு திமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்த மோதல் போக்கும் இல்லை. உறவு சுமுகமாகவே உள்ளது. எல்லாருக்கும் தன்மானம் தான் முக்கியம். சுயமரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது என்றாா் அவா்.