கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியை கடலரசி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரும், முன்னாள் மாணவருமான அருள்மணி, பெற்றோா் -ஆசிரியா் கழக உறுப்பினா் சின்னத்துரை, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கங்கைகொண்டான் ஊராட்சி தலைவி கவிதா பிரபாகரன், மானூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் மாலதி ஆகியோா் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினா். உதவித் தலைமையாசிரியா்கள் கிங்ஸ்லின் லூகாஸ், சிவசுப்பிரமணியன், உடற்கல்வி ஆசிரியா் காா்த்திக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.