நெல்லையில் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் பைக்கில் கடத்திவரப்பட்ட சுமாா் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அண்ணா நகா் சந்திப்பு பகுதியில் பைக்கில் வந்த மேலப்பாளையத்தைச் சோ்ந்த தேவகுமாா்(35) என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில், அவா் சுமாா் 6.075 கிலோ புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் தேவகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.