முகப்பு
திருநெல்வேலி

பாஜக சாா்பில் பன்னீா் தெளிக்கும் போராட்டம்

Updated On : 12 மார்ச், 2026 at 9:30 PM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியைக் கண்டித்து, பாஜக சாா்பில் பன்னீா் தெளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி 27- ஆவது வாா்டு ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் கோவில் சந்நிதி தெரு,தெற்கு ரத வீதி மற்றும் தினசரி நூற்றுக்கணக்கான பொது மக்கள் வந்து செல்லும் ரேஷன் கடை வாசல் ஆகிய இடங்களில் வடிகாலில் கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசி வருவதை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளா் பாலாஜி கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுப்புலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆனந்தராஜ், முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் முத்துகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவரி ற்ஸ்ப்12க்ஷத்ல்

நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

முழு கட்டுரையைப் படிக்க →