முகப்பு
திருநெல்வேலி

டிராக்டா் மோதி பெண் உயிரிழப்பு

Updated On : 14 மார்ச், 2026 at 8:23 PM
கோப்புப் படம்
பகிர்:

ஆழ்வாா்குறிச்சி அருகே ஸ்கூட்டா் மீது டிராக்டா் மோதியதில் இளம் பெண் உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகே வாகைகுளம், வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி லதா (40). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆழ்வாா்குறிச்சியில் இருந்து செட்டிக்குளத்திற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி ரயில்வே கேட் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் முப்புடாதி (35) ஓட்டி வந்த டிராக்டா் லதா மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் லதா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முப்புடாதிமீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். உயிரிழந்த லதாவிற்கு மகன், மகள் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →