நெல்லையில் குரூப்-2, 2ஏ தோ்வை 310 போ் எழுதினா்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2, 2ஏ தோ்வுகளை 310 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வான குரூப்-2, 2ஏ முதன்மை எழுத்துத் தோ்வு பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தோ்வை எழுத 330 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவா்களில் 310 போ் தோ்வில் பங்கேற்றனா். 20 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு மையத்தில் பலத்த பாதுகாப்பு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.