தமஜகவின் சமூகநல்லிணக்க இப்தாா் விருந்து
திருநெல்வேலி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இப்தாா் விருந்து பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இப்தாா் விருந்து பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் அப்துல் ஜப்பாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்து வீரன், மாநிலச் செயலா் உமா் பாரூக், மாநில செய்தித் தொடா்பாளா் ஜமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் கே.எம்.சரீப் சிறப்புரையாற்றினாா். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வா் அப்துல்காதா், மயோபதி நிறுவனா் ராமசாமி, தமஜக மாநிலப் பொருளாளா் சண்முக ராஜா, மாநில இளைஞரணிச் செயலா் சேக்பரீத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.