சேரன்மகாதேவி மனோ கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளி விழா நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளி விழா நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே. சகாயராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக எழுத்தாளா் இமையம், பல்கலைக் கழக பதிவாளா் ஜெ. சாக்ரடீஸ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். விழாவில், வெற்றியாளா்களுக்கு 11 கல்விப் பரிசுகளும், 166 கலாசாரப் பரிசுகளும், 155 விளையாட்டுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் எம். சுகன்யா, மண்டல இணை இயக்குநா் பி. விக்டோரியா தங்கம், பல்கலைக் கழக இயக்குநா் ஏ. வெளியப்பன், முக்கூடல் பாலகரன் சரஸ்வதி கலை அறிவியல் மகளிா் கல்லூரி உதவிப் பேராசிரியை கே. நீலா உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். வணிகவியல் துறைத் தலைவா் கே. தெய்வநாயகம் வரவேற்றாா். பேராசிரியை கிறிஸ்டினா நன்றி கூறினாா்.