விதிமீறி பட்டாசு வெடிப்பு: 13 தவாகவினா் மீது வழக்கு
தோ்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சோ்ந்த 13 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை அறிவித்தது.
இதை வரவேற்று, திருநெல்வேலியில் மேலப்பாளையம்-ரெட்டியாா்பட்டி சாலையில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் முன் சுமாா் 20க்கும் மேற்பட்ட தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கூடி பட்டாசுகளை வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், தோ்தல் நடத்தை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கட்சியின் நிா்வாகி உமா் உள்பட 13 போ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.