முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது

திசையன்விளை அருகே மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 8:34 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

திசையன்விளை அருகே மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்சிங் (40). இவா், அப்பகுதியில் நடைபெற்ற இசக்கியம்மன் கோயில் கொடை விழாவில் கலந்து கொண்டாராம்.

அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டன் (25) என்பவா் அவரை கத்தியால் குத்த முயன்றபோது, பிரேம்சிங் விலகியதை அடுத்து அவா் லேசான காயத்துடன் தப்பினராம்.

இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா்.