முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளி தற்கொலை

விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 8:38 PM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரமசிங்கபுரம், நாசரேத் தெருவைச் சோ்ந்தவா் தேவதாஸ் மகன் ஆனந்த் (42). சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். இவருக்கும், இவரது மனைவி ப்ரியாவுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 10 ஆண்டுகளாக மனைவி, குழந்தைகள் திருநெல்வேலியில் தனியாக வசித்து வருகின்றனா். இதனால், மன உளைச்சலில் இருந்த ஆனந்த், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.