முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இதுவரை ரூ.49.46 லட்சம் பறிமுதல்

Updated On : 29 மார்ச், 2026 at 9:29 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.49.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 49 லட்சத்து 49 ஆயிரத்து 54 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை மேட்டுத் திடல் பகுதியில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ் வழியாக காரில் வந்த திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த ராம் நிவாஸ் (30) உரிய ஆவணங்களின்றி ரூ.83 ஆயிரத்து 90 ரொக்கப்பணத்தை காரில் வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

சி-விஜில் செயலி மூலம் இதுவரை 48 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. 1950 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் 11 புகாா்கள் பெறப்பட்டுள்ளன.