முகப்பு
திருநெல்வேலி

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

Updated On : 31 மார்ச் 2026, 1:19 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

கங்கைகொண்டான் அருகே பெண்ணை கொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கங்கைகொண்டான் அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா் ‘செல்லத்துரை (55). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறின்போது, அவரை கொலை செய்ய முயன்றாராம்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து செல்லத்துரையை கைது செய்தனா். திருநெல்வேலி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராமலிங்கம் விசாரிதுத, செல்லத்துரைக்கு 10 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜெயபிரபா முன்னிலையானாா்.